Saturday, October 2, 2010

Mom I miss U Lots!!!

சந்தோஷத்தின்  உச்சகட்டம் ..
அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தன ..
அவள் உர்ச்சஹத்தை சொல்ல வார்த்தைகள் தடுமாறின ..
ஓர்  சாதனை படைத்த ஜொலிப்பு அவள் அஹத்தில் ..
அவள் கனவு நினைவான பூரிப்பு ..
அவள் முகம் முழுவதும் தழுவிய புன்னகை ..

இவ்வளவு உணர்சிகளும் எதற்காக ??
அவளது மகள் தன் முதல் சம்பளத்தில் அன்பளிப்பாக வாங்கி கொடுத்த
புடவையை பார்த்து !!

மகிழ்ச்சியில் தத்தளித்த தன் தாயை கண்ட நேரத்தில் ..
சுள் என்று வலித்தது ...........
குருதியை சுவைத்த கொசுவால் !
இழந்த தன் அன்பு தாயின் புகைப்படத்துடன்
கண்ணீர் ததும்ப தூக்கம் கலைந்தாள்..
அந்த மகளின் ஆசைகள் கனவுகளில் மட்டுமே நிணைவயின  !!!

No comments:

Post a Comment