Saturday, October 2, 2010

Pudhiayador vazhvamaipom !!!

விடியற்காலை அழகினை ரசிக்க வேண்டிய நாம்
இன்று ரசிப்பு தன்மை இழந்து வசிக்கிரோம்
சுவையான உணவு சமித்து புசித்த நாம்
இன்று உணவஹங்களின் சமையலறையை நம்பி வாழ்கிறோம்
மக்கட்செல்வம் கண்டு பூரித்து வாழ்ந்த நாம்
இன்று அந்த இன்பத்தை சிறார் பராமரிப்பு நிலையங்களுக்கு தத்து கொடுத்து விட்டோம்
விட்டுக்கொடுத்து சுகம் காண வேண்டிய நாம்
இன்று தன்னலம் கருதி சண்டைகளை நம் வசப்படுதுகிறோம்
ஆன்மீகத்தில் திளைத்து முதிர்ச்சி பெற வேண்டிய நாம்
இன்று இயன்டிரன்களாய் சுழன்று கடவுளை நினைக்கவே மறக்கின்றோம்
இத்தனை மாற்றங்களும் எதனால் ?
இன்றைய கணினி உலஹத்துள் கடத்தப்பட்டதால் !
இதனால் நாம் தொலைத்தது பல , பெற்றது ஒன்றே ஒன்று தான் - பணம் !!
நம்மையே துலைத்து விட்டு பணத்திற்கு அடிமையாய் சிறை பட்டு கிடக்கும் நாம்
சுதந்திரம் எண்ணி சிந்தனை சிறகுகளை விரிப்போம் !
புதியதோர் வழ்வமைப்போம்  !!!

No comments:

Post a Comment